The 05 Best Inspirational Short Stories In tamil
சிறந்த உத்வேகம் தரும் 05 சிறுகதைகள்
வணக்கம் அன்பான வாசக பெருமக்களே !
சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் ! உங்கள் அருகே இருப்பவருக்கு Corona இருக்கலாம் ! - Corona விழிப்புணர்வு
கடந்த ஊரடங்கு நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த சில கதைகள் , அந்த கதைகள் அனைத்தும் உண்மையிலேயே அற்புதமானவை , நான் படித்த 05 உற்சாகமான சிறுகதைகளை முன்னிலைப்படுத்தி இந்த கட்டுரை ...
ஒவ்வொரு கதையின் முடிவிலும் தா ர்மீகத்தைப் பற்றிய கருத்து ஒரு குறுகிய விளக்கத்துடன் வைத்திருக்கிறேன்.
05.யானையின் கயிறு ( நம்பிக்கை - confidence or belief)
அப்பாவும் தன் மகனும் யானை முகாம் வழியாக நடந்து
கொண்டிருந்தனார் , யானையை காலில் சிறிய
கயிறால் கட்டிப்போட்டிருப்பதை பார்த்த மகன் தன் அப்பாவிடம் கேள்வி கேட்ட ஆரம்பித்ததான் .... அப்பா.. யானையை கூண்டில் வைக்கவில்லை ? சங்கிலியால் ஏன் கட்டவில்லை ?யானையின் பலம் அதிகமாச்சு ! அது ஏன் கயிற்றை உடைத்து முகாமிலிருந்து தப்பிக்கவில்லை! இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தான் ..., அப்பா தன் அருகில் இருந்த பயிற்சியாளரிடம் சென்று கேள்விகளை எழுப்பினார்.
பயிற்சியாளர் பதிலளித்தார்;
" யானைகள் சிறுவயதிலிருந்தே அவற்றைக் கட்டுவதற்கு ஒரே அளவிலான கயிற்றை பயன்படுத்துவோம் , மேலும்
அந்த வயதில் பழகியதால் அந்த யானை வளரும் போது
பிரிந்து செல்ல முடியாது ! என்று நம்புவதற்கு
நிபந்தனை விதிக்கப்படுகிறது. யானை வளர்ந்த பின் இந்த கயிறு தன் தன்னை பிடித்துருக்கிறது என்று நம்பி ஓருபோதும் விடுபட முயற்சிக்காது "
கதையின் தத்துவம் ( story moral)
யானைகள் முகாமில் இருந்து தப்பிக்காமல் இருக்க ஒரே காரணம், காலப்போக்கில் அது சாத்தியமில்லை என்ற நம்பிக்கையை ஏற்றுக்கொண்டதுதான்.
04.தவளைகளின் ஊக்கம் (Encouragement) :-
ஒரு குழுவாக காடுகளின் வழியாக தவளைகள் பயணித்துக் கொண்டிருந்தது , அதில் இரு தவளைகள் ஆழமான குழியில் விழுந்தது , மற்ற தவளைகள் திரண்டு குழியை சுற்றி அது எவ்வளவு ஆழம் ! என்று ஆராய்ந்து கொண்டிருந்தது , அந்த இரண்டு தவளைகளை பார்த்து மற்ற தவளைகள் கூறியது , உங்களை காப்பாற்ற எந்த நம்பிக்கையும் இல்லை ! என்று
இருந்தபோதிலும் , மனம் தளராமல் இரண்டு தவளைகள் மற்றவர்கள் சொல்வதை கண்டுகொள்ளாமல் அவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தன ,
அந்த இரண்டு தவளைகள் முயற்சிகள் செய்து கொண்டிருந்த போதிலும் குழியின் உச்சியில் இருந்த தவளைகள் நீங்கள் பிழைப்பது ரொம்ப கடினம் ! என்று சொல்லிக் கொண்டிருந்தது
இறுதியில் ஒரு தவளை இறந்து போனது , மற்ற தவளை விடாமுயற்சியால் கடினமாக குதித்துக் கொண்டே இருந்தது ,மீண்டும் குழியின் மேலிருந்த மற்ற தவளைகள் கத்திக் கொண்டே இருந்தது ,
கடைசியாக அந்த ஒரு தவளை முயற்சி செய்து வெளியே வந்தது , வெளியே வந்த தவளையைப் பார்த்து மற்ற தவளைகள் கேள்வி கேட்டது , நாங்கள் சொன்னது உனக்கு கேட்கவே இல்லையா !என்று உடனே அந்த தவளை ஆமாம் ! எனக்கு காது கேட்காது என்று சொன்னது .
கதையின் கருத்து
ஒருவர் நம் வாழ்க்கையில் மற்றவர்களின் வார்த்தைகள் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தும் ! உங்கள் வாயிலிருந்து வெளி வருவதற்கு முன்னால், நீங்கள் சொல்வதைப் பற்றி சிறிது சிந்தியுங்கள்! இது வாழ்க்கைக்கும் இறப்புக்கும் உள்ள சிறிய வித்தியாசமாக இருக்கலாம் !
03 ஒரு பட்டாம்பூச்சி (போராட்டங்கள் - struggles)
ஒரு மனிதன் ஒரு பட்டாம்பூச்சியின் ஒரு கூட்டைக் கண்டுபிடித்தான். அந்த மனிதன் கூண்டில் போராடிக்கொண்டிருக்கும் பட்டாம்பூச்சியை பல மணி நேரம் வந்து பார்த்தான் ,
திடீரென்று பட்டாம்பூச்சி முன்னேற்றம் செய்வதை நிறுத்திவிட்டு சிக்கிக் கொண்டது போல் இருந்தது !
எனவே அதைப் பார்த்துக் கொண்டிருந்த மனிதன் பட்டாம்பூச்சிக்கு உதவ முடிவு செய்தான் , கத்திரிக்கோலை எடுத்து கூண்டில் சிக்கி கொண்டிருக்கும் பட்டாம்பச்சியை ஓரமாக துண்டித்தான் ,பின்னர் பட்டாம்பூச்சி வெளியே தென்பட்டது , அதை பார்ப்பதற்கு வீங்கிய உடலும் சுருங்கிய சிறிய இறகும் இருந்தது ,
அந்த மனிதன் எதை பற்றியும் யோசிக்கவில்லை ! பட்டாம்பூச்சியின் சிறகுகள் பெரிதாகும் வரை காத்திருந்தான் , ஆனால் எதுவும் நடக்கவில்லை! தனது வாழ்நாள் முழுவதையும் பறக்க முடியாமல் பட்டாம் பூச்சி கழித்தது ,
பட்டாம்பூச்சி அந்தக் கூண்டில் உள்ள திரவத்தின் வழியாக சிறகுகள் உருவாகிறது இயற்கை ! அது மேலும் கூண்டிலிருந்து வெளியே பார்ப்பதற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தது , அந்த மனிதனுக்கு கனிவான இதயம் இருந்த போதிலும் ,பட்டாம்பூச்சிக்கு கூண்டில் போராட்டம் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை .
கதையின் கருத்து
நம் வாழ்க்கையில் போராட்டங்கள் பலத்தை வளர்கின்றன , போராட்டங்கள் இல்லாமல் ! நாம் ஒருபோதும் வளர மாட்டோம் , ஒருபோதும் வலுவடைய மாட்டோம் ! எனவே சவால்களை சமாளிப்பதற்கு நமக்கு மிகவும் முக்கியம் மற்றவர்களின் உதவியை நம்பாமல் இருக்க வேண்டும் .
02.குருட்டு பெண் ( மாற்றம்- change)
ஒரு குருட்டுப் பெண் இருந்தாள், அவள் பார்வையற்றவள் என்ற காரணத்திற்காக தன்னை வெறுக்கிறாள். அவள் வெறுக்காத ஒரே நபர் அவளுடைய அன்பான காதலன் ! அவன் எப்போதும் அவளுக்காகவே ஆறுதலாக இருந்தான். அவளால் உலகை மட்டுமே பார்க்க முடிந்தால், அவனை திருமணம் செய்து கொள்வேன் ! என்று சொன்னாள்.
ஒரு நாள், யாரோ ஒரு ஜோடி கண்களை அவளுக்கு நன்கொடையாக அளித்தனர் - இப்போது அவள் காதலன் உட்பட எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. அவளுடைய காதலன் அவளிடம், “இப்போது உன்னைப் பார்க்க முடியும், நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா?” என்று கேட்டார்.
தனது காதலனும் குருடனாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள், அவனை திருமணம் செய்ய மறுத்துவிட்டாள். அவரது காதலன் கண்ணீருடன் நடந்து சென்றார், பின்னர் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினார்:
என் அன்பே கண்களை மிகவும் கவனமாக கவனித்துக் கொள்
கதையின் கருத்து:
நம் சூழ்நிலைகள் மாறும்போது, நம் மனமும் மாறுகிறது. சிலருக்கு முன்பு இருந்ததைப் பார்க்க முடியாமல் போகலாம், அவற்றைப் பாராட்ட முடியாமல் போகலாம். இந்த கதையிலிருந்து ஒன்று மட்டுமல்லாமல் பல விஷயங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும் .
01.ஒரு தங்க பெட்டி (அன்பு - love)
ஒரு நபர் தனது மகளை மூன்று வயது மகளை தங்க காகிதத்தை (gift wrapping paper) வீணடித்ததற்காக தண்டித்தார்.
இருந்தபோதிலும் அந்த சிறுமி
மறுநாள் காலையில் தனது தந்தையிடம் பரிசை கொண்டுவந்து தன் , அப்பாவிடம் கொடுத்தது அப்பா இது உங்களுக்காக என்று !
முன்னதாக செய்த தவறை எண்ணி வெட்கப்பட்டான் , பின்பு அந்தப் பெட்டியை திறந்து பார்க்கும் போது , காலியாக இருப்பதை கண்டு மிகவும் கோபம் கொண்டான் ! தன் மகளை அழைத்து பரிசு கொடுக்கும் போது உள்ளே ஏதாவது இருக்க வேண்டும் என்று உனக்குத் தெரியாதா !
அந்த சிறுமி அழுதுகொண்டே சொன்னாள் ! அப்பா அது காலியாக இல்லை ! அந்தப் பரிசு பெட்டியில் என் முத்தங்களை கொடுத்துள்ளேன் , 'அது உங்களுக்காக அப்பா '
அவன் மிகவும் மனமுடைந்து போனான் ! தன் மகளை அணைத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டான்
திடீரென்று ஒரு நாள் விபத்தில் குழந்தையின் உயிர் பிரிந்து சென்றது ,
அந்தப் பரிசை தங்க போட்டியில் பல ஆண்டுகளாக வைத்திருந்தார் ! அவர் எப்போதெல்லாம் சோர்வு அடை வாரோ ! அப்போதெல்லாம் கற்பனையாக முத்தத்தை எடுத்துக்கொள்வார் , அதில் வைத்திருந்த குழந்தையின் அன்பை நினைவில் கொள்வார் ..!
கதையின் கருத்து
உலகில் மிக அருமையான பரிசு காதல் .
சில்லுக் கருப்பட்டி
இந்த எழுச்சியூட்டும் சிறுகதைகளைப் படித்ததற்கு நன்றி. , இது உண்மையில் நம்மை சிந்திக்க வைக்கிறது.
பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் வேறு ஏதேனும் உத்வேகம் தரும் சிறுகதைகள் உங்களுக்குத் தெரிந்தால், கீழேயுள்ள கருத்துகளில் எனக்குத் தெரியப்படுத்துங்கள் !
நன்றி!


1 Comments
மிக அருமை
ReplyDelete