கொடைக்கானல் மலைகளின் இளவரசி
வணக்கம் அன்பான வாசக பெருமக்களே 🙏🏼
சூரிய உதயத்திற்கு இப்படி ஓர் அழகா!
பனி மலையிடையில் கிழித்து வெளிவரும் செங்கதிரவனின் கரங்கள்!
என்ன ஒரு கம்பீர தோற்றம் !
என் விழிவழியே புகுந்து காலை கதிரவன் எண்ண அலைகளாக பிராணமித்துக் கொண்டிருந்தான் .
இந்த கொடை மலையில் விடியற்பொழுதை கண்டு !
மரம் ஏறிய அணில் வாலை தரையில் தொட்டு குதிக்கிற மாதிரி மனசு நிதானத்துக்கு வந்தது . இந்த மலையின் இரகசியங்களை தெரிந்து கொள்ள ! விடுதியை விடைப் பெற்று ! மேலும் பயணத்தை தொடர்ந்தோம் .
பூம்பாறை நோக்கி பயணம் செய்தோம் ! வழிகாட்டி எங்களுக்கு அங்குள்ள சிறப்புகளை கூறிக் கொண்டு வந்தார் ; தீடிரென்று வானம் தன் உடையை மாற்றி மேகக்கூட்டத்தை கருமையாக மாறி கொண்டு ,
உண்டியலை உடைத்த சில்லறை சத்தம் ! சட சடன்னு மழை ; வழி தெரியல ! மலை தெரியல ! பூம்பாறை காடு நனையுது ; மலை பாறை நனையுது ; பாறையில இருக்கிற மரம் , செடி , கொடி நனையுது ; பூமியிலருக்கிற வேர் நனையுது ;
நனையாம இருந்தது நாங்க மட்டும் தான் காருக்குள்ளே ! இயற்கை அபிக்ஷேகத்தில் இந்த இளவரசி குளிர நனைந்தால் ;
ஆயிரம் கண்கள் போதுமா!
மழை பெய்ந்து ஒய்ந்த பின் கொடை மலை
பூம்பாறை பச்சை தீப்பிடிச்ச எரிக்கிற
மாதிரியிருக்கு இந்த பூமி !
“ கோவில்யில்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம்” இந்த அழகிய இளவரசி மலையே ஒரு கோவில் மேலும் அழகுவுட்ட சில கோவில்கள் இங்கே ! ( Poombarai Murugan temple history in tamil) இந்து சமயத்தால் கவரப்படட ஒரு ஐரோப்பிய பெண்ணால் கட்டப்பட்ட இந்த குறிஞ்சியாண்டவர் கோவில் ; இங்கு ஆண்ட ஆங்கிலேயர் காலத்தில் கொடை மலை பகுதியில் நீல நிற வண்ணத்தில் பூத்து குலுங்கும் குறிங்சிமலரின் அழகை காதலித்த ஒரு ஐரோப்பிய பெண்மணி , இதே பகுதியை சார்ந்த இராமநாதனையும் காதலித்து மணந்து தன் பெயரையும் மாற்றியுள்ளார்கள் லீலாவதி என்று ! இப்படி இந்த கதையை சொல்லிகொண்டுவந்தார் ; கதையை கேட்டுக்கொண்டு குறிஞ்சியாண்டவர் கோவிலையடைந்தோம் ,
முருகப்பெருமானை தரிசித்து ; கோவிலை அங்கப்பிரதேஷணம் செய்துகொண்டிருக்கும் போது எங்களுடன் சேர்ந்து பனிமுட்டங்கள் கொஞ்சி விளையாடி வந்தது ; சில நினைவுகளை பதிவு செய்துவிட்டு பயணம் செய்தோம் , விட்ட கதையை தொடர…….
பூம்பாறையிலிருந்து பார்த்தல் பழனி மலை முருகனை தரிசிக்கலாம் ; பனிமுட்டங்கள் கருணை செய்தல் செய்தால் மட்டும் அப்படி ஒருநாள் இந்த ஐரோப்பிய பெண்மணி குறிஞ்சி மலரையும் பழனி கோவில் தரிசித்த போது பனிமுட்டங்கள் முடியதாலும் ; அதற்கு முருகன் என்ன செய்வார் ? முருக திருவிளையாட்டு இயற்கையோடு விளையாண்டு இந்த கோவிலை காட்டியுள்ளனர் என சிலர் ; தற்போது இந்த கோவில் பினபுறத்திலிருந்து பழனி கோவிலையும் , வைகை அணையும் இளவரசி பேரழகுடு சேர்த்து கண்டு மகிழலாம்.இளவரசி மலை பேரழகில் வரலாற்றை பெருமையாக சொல்லி கொண்டு வந்தார் ; மீசை வைத்த சிறுபிள்ளைகளாக இயற்கையோடு சேர்த்து கதையை ரசித்து கொண்டு சென்றோம் ,
பூம்பாறை (Poombarai )செல்லும் வழியில் புதிதாக கட்டிக்கொண்ட்டிருக்கும் மஹாலஷ்மி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு ; பூம்பாறைக்கு பயணத்தை தொடர்ந்தோம் , திருப்பதி கோவில் படிக்கட்டுகள் மாதிரி அடுக்காக பசுமையான வயல்வெளிகள் ;
கண்களுக்கு எட்டிய தூரம் வரை பனிபடர்ந்த மலைகள் , அடர்ந்த காடுகள் , மலை ,குன்றுகள் இருக்கும் இடம் என்றாலேமுருகன் இல்லாமல் எப்படி?
இதன் குன்றுகள் மத்தியில் பூம்பாறை குழந்தை வேலப்பர் (Kulanthai velappar temple kodaikanal), கோவில் நவபாஷணத்தால் செய்யப்படட சிலை ; இந்த சிலை வடிவில் குழந்தையாக காட்சியளிப்பார் முருகப்பெருமாள் ! மற்ற முருகன் கோவில் போலயில்லாமல் அனைவருக்கும் சமஉரிமை , இடையூறு இல்லாமல் தரிசனம் செய்தோம் ; சிறப்பு தரிசனம் இந்த கோவிலில் இல்லை ! இந்த மலை (மலை கிராமம்) வாழ் மக்களின் செயல் மற்றும் ஒற்றுமையை கண்டு மெய்சிலிர்த்தது , இளவரசி பேரழகி மலை பகுதி மத்தியில் இயற்கையான அமைதியான சூழ்நிலையில் சுத்தமான பராமரிப்பில் கோவில் ! இங்கே ஒரு அம்மா தேனும் , தினைமாவும் கலந்து கோவிலை நிவேதனம் செய்து கொண்டிருந்தார் ; தரிசனம் செய்து விட்டு , அங்கே சென்றோம் அதற்குள் முடிந்தேவிட்டது , தீர்ந்து போன வைத்திருந்த பாத்திரத்தை காண்பித்தார்கள்….,மனதுக்குள் இருண்டுவிட்டது ! பனிமுட்டங்கள் கோவிலை மறைத்தது ! எத்தரமாக கோவிலை வலம் வரும் போது திர்ந்து போய்ச்சு சொன்ன அம்மா மீண்டும் விநியோகம் செய்தார்கள் ; எங்களை கண்டவுடன் ஒரு உருண்டை தந்தார்கள் , கோவிலுக்கு வந்த வேலை நிறைவேறியது போல் ஒர் உணர்வு ! மூடியிருந்த பனிமுட்டங்கள் விலகி கோவில் கோபுர தரிசனம் காட்சியளித்தது .


0 Comments